சீன பௌத்த சங்கத்தின் துணைத் தலைவரும், 11வது பஞ்சென் எர்டேனி சோஜி நோர்பு, ஜனவரி திங்கள் 7 முதல் 13ஆம் நாள் வரை, ஹே லுங் ஜியாங் மாநிலத்தின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஆழமாக அறிந்து கொள்ளும் வகையில், அங்கு சோதனைப் பயணம் மேற்கொண்டார்.
ஹேய் லுங் ஜியாங் மாநிலத்திலுள்ள சீன வடகிழக்குப் பகுதியின் தியாகிகள் நினைவுக் காட்சியகம் மற்றும் சீனாவில் ஆக்கிரமிப்பு மேற்கொண்ட ஜப்பான் 731வது படை குற்றச் சான்றுகளின் பொருட்காட்சிசாலையை அவர் பார்வையிட்டார். வரலாற்றை மறக்க முடியாது என்றும், இந்த வரலாற்றை உலக மக்கள் அனைவரும் புரிந்து கொள்ளச் செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டார். மேலும், சீனக் கனவு என்ற இலக்கை நனவாக்க, சீன மக்கள் ஒருமனதாக முயற்சிகள் மேற்கொண்டு தங்களது ஆற்றல் முழுவதையும் வெளிக்காட்ட வேண்டுமென அவர் தெரிவித்தார்.