தீக்குளிப்பு வழக்கு முடிவு
2013-01-15 21:18:41 cri எழுத்தின் அளவு: A A A
வெளிநாட்டிலுள்ள தலாய் லாமாவின் திபெத் இளைஞர் காங்கிரஸ் அமைப்பு ஏற்பாடு செய்த தீக்குளிப்பு வழக்கை அண்மையில் சீன கான்சூ மாநிலக் காவற்துறை துப்பு துலக்கியது. குங்பாவ்ச்சே உள்ளிட ஐயத்துக்குரிய 7 பேர் கைது செய்யப்பட்டனர். 2012ஆம் ஆண்டு அக்டோபர் 6ஆம் நாள் கான்சூ மாநிலத்தின் ஹெ ச்சோ நகரில் சாங்சி ச்சேன்ச்சோ என்பவர் தீக்குளித்து உயிரிழந்தார். அவர் திபெத் இளைஞர் காங்கிரஸ் அமைப்பின் உறுப்பினர்களால் தூண்டப்பட்டு இவ்வாறு செய்தார். மேலும் தூண்டியவர்கள் முன்தாயாரிபோடு இச்சம்பவத்தை நேரடி ஒளிப்பதிவு செய்து, இணையத்தில் வெளியிட்டு திபெத் பிரதேசத்தில் மனித நேய நெருக்கடி ஏற்பட்டதாக வசந்தி பரப்பினர். தீக்குளிப்புச் சம்வத்தை ஏற்பாடு செய்து பிறரை தற்கொலை செய்யத் தூண்டுவது சமூகத்தைப் பாதிக்கும் மிக கடுமையான குற்றச்செயலாகும். எஞ்சிய குற்றவாளிகளைக் கைது செய்ய சீனக் காவற்துறை சர்வதேச ஒத்துழைப்பு வழிமுறை மூலம் தொடர்புடைய நாடுகளின் காவற்துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்