அண்மையில், சிரியாவின் அலேப்போ பல்கலைக்கழக்த்தில் குண்டு வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்தது. இது குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹோங் லேய் 16ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் கேள்வியைப் பதிலளிக்கும்போது, பொது மக்களைப் புண்படுத்தும் வன்முறைச் செயல்பாடுகளைச் சீனா வன்மையாகக் கண்டிக்கிறது என்று தெரிவித்தார். போரையும் வன்முறையையும் நிறுத்துமாறு சிரியாவில் மோதலில் சிக்கியுள்ள இரு தரப்புக்கும் சீனா வேண்டுகோள் விடுக்கிறது என்றார்.
சிரியாவின் அலேப்போ பல்கலைக்கழக்த்தில் 15ஆம் நாள் குண்டு வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்தது. அதில் குறைந்தது 80 பேர் உயிரிழந்தனர். 160 பேர் காயமடைந்தனர். எதிர்தரப்பு இச்சம்பவத்தை நிகன்த்தியதாக சிரிய அரசும், அரசு நிகழ்தியதாகச் சிரிய எதிர்க்குழுவும் ஒன்றை ஒன்று குற்றஞ்சாட்டியுள்ளன.