சர்வதேச வரையறையின் மூலம் தியாவ் யூ தீவுக் கடற்பரப்பில் நுழையும் சீன விமானங்களை ஜப்பான் கையாளுமென அறிவிக்கப்பட்டுள்ளது. சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹோங் லேய் 16ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் இது குறித்த கேள்விக்குப் பதிலளித்தபோது, சீனாவின் தியாவ் யூ தீவுக் கடற்பரப்பிலும் வான் பரப்பிலும் சீனாவின் இறையாண்மையை மீறிய ஜப்பானின் செயல்பாடுகளைச் சீனா எப்போதும் உறுதியாக எதிர்க்கிறது. ஜப்பானிய தரப்பின் செயல்பாடுகளைச் சீனா விழிப்புடன் கவனித்து வருகிறது என்றார்.