அணு ஆயுதங்களை வளர்ப்பதைத் தடுக்கும் ஒரு கட்டளையில் ஈரானின் அதியுயர் தலைவர் அயதெல்லா சயீது அலி காமெனெய் கையொப்பமிட்டுள்ளதாக ஈரான் வெளியுறவு அமைச்சகம் 15ஆம் நாள் அறிவித்தது. இது குறித்து பேசுகையில், ஈரான் தரப்பின் இச்செயலில் கவனம் செலுத்தி வரவேற்பதாகவும், ஈரான் அணு ஆற்றல் பிரச்சினையைத் தீர்க்கும் ஒரு நீண்டகால வழிமுறையைப் பல்வேறு தரப்புகளும் ஆராய வேண்டும் எனவும் சீன வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ஹுங் லெய் 16ஆம் நாள் தெரிவித்தார்.
அதியுயர் தலைவர் காமெனெய்யின் கட்டளையை ஈரான் கடைபிடிக்கும். ஈரான் அணு ஆயுத ஆய்வில் ஈடுபடுவது தொடர்பான ஐயத்தை மேலை நாடுகள் நிறுத்தலாம் என்று ஈரான் வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். தவிர, சர்வதேச அணு ஆற்றல் நிறுவனத்துடனான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.