• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பௌத்த மதச் சங்கத்தின் ஆய்வுக் கூட்டம்
  2013-01-16 17:23:35  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனப் பௌத்த மதச் சங்கம் 16ஆம் நாள் செங்து நகரில் ஆய்வுக் கூட்டம் நடத்தி, சி ச்சுவான், சிங்காய், கான்சூ ஆகிய மாநிலங்களில் நிகழ்ந்த தீக்குளிப்புச் சம்பவத்தின் காரணத்தை ஆராய்ந்தது. சுமார் 40 பௌத்த மத குருக்களும், நிபுணர்களும் இதில் கலந்து கொண்டனர்.


இரக்கமும், கொலை செய்யாமையும் பௌத்த மதத்தில் உயிரைப் போற்றுவது மையக் கருத்தாகும் என்று கூட்டத்தில் கலந்து கொண்டோர் சுட்டிக்காட்டினர்.
பௌத்த மது துறவியர் தீக்குளிப்புச் சம்பவத்தில் ஈடுபடுவதும், பிறரை அவ்வாறு தீக்குளிக்க ஊக்கமளிப்பதும் மதத்தின் விதிகளுக்கு முற்றிலும் புறம்பானவை என்று சீனப்பௌத்த மதச் சங்கத்தின் துணைத் தலைவர் கியாமுச்சியாங் லோசானசுமெய் துதான்ச்சோசினிமா கூறினார்.
ஐ.நா பொது ஒப்பந்தத்தின் படி, மதத்தின் பெயரிலோ இதர வழிமுறையிலோ பிறரை தற்கொலை செய்யத் தூண்டுவது கண்டிக்கப்பட வேண்டிய செயலாகும். சட்டப்படி தண்டனை விதிக்கப்பட வேண்டியதுமாகும் என்று சீனத் தேசிய மத விவகார ஆணையத்தின் தலைவர் வாங் சோ ஆன் கூட்டத்தில் குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040