தியாவ்யூ தீவு பிரச்சினையில் ஜப்பான் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதைக் கூறி, சூழ்நிலையை தீவிரப்படுத்துவதற்கும், பேச்சுவார்த்தை மூலம் சர்ச்சையை அமைதியாகத் தீர்க்கும் பல்வேறு ஆசிய நாடுகளின் செயல்பாட்டுக்கும் பெரிய வேறுப்பாடு நிலவுகிறது. சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹொங் லெய் ஜனவரி 18ஆம் நாள் பெய்ஜிங்கில் அவ்வாறு தெரிவித்தார்.
அண்மை காலமாக, தியாவ்யூ தீவுக்கு அருகிலுள்ள வான் பரப்பில், சீனாவுக்கும் ஜப்பானுக்குமிடை பதட்டம் தொடர்ந்து வருகிறது. இரு தரப்புகளும் இராணுவ மோதல் நிகழத்தககூடும் என்று சில செய்தி ஊடகங்கள் அறிவித்தன. இது குறித்து செய்தியாளர்களின் தொடர்புடைய கேள்விகளுக்குப் பதிலளித்தபோது ஹொங் லெய் அவ்வாறு தெரிவித்தார்.