வரலாற்றுக் கால ஓட்டத்தை ஏற்ப, பொறுப்புடைய மனப்பான்மையுடன் செயல்படுத்தி, ஆசியாவின் நிதானம் மற்றும் வளர்ச்சிக்காக, ஜப்பான் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று சீனா விரும்புகிறது.
ஜப்பான் தலைமை அமைச்சர் அபே ஷிஞ்சே 18ஆம் நாள் பிற்பகல் இந்தோனேசியாவின் தலைநகரான ஜகார்த்தாவில், ஆசியான் நாடுகளுக்கான ஜப்பானின் கொள்கைகள் பற்றி செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்ததைக் குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சின் காங் 19ஆம் நாள் மேற்கூறிய கருத்தை தெரிவித்தார்.
பல்வகை பண்பாட்டு வளங்களும் பல்வகை சமூக அமைப்புகளும் ஆசியாவில் கூட்டாக அமைந்துள்ளன. செழுமை மற்றும் உயிராற்றல் நிறைந்திருந்த பிரதேசமாகிறது ஆசியான். இந்நிலையில், பல்வேறு நாடுகள் அமைதியாகவும் கூட்டாகவும் வாழ்ந்து வளர்ச்சியடைய வேண்டும் என்று சீனா எப்போதும் கருதுவதாக சின் காங் கூறினார்.