அண்மையில், தியாவ் யூ தீவு குறித்து, அமெரிக்கா உண்மையைப் பொருட்படுத்தாமல், தவறான கருத்தை வெளியிட்டது. இது குறித்து சீனா கடினமான மறுத்துரையையும் எதிர்ப்பையும் உறுதியாக வெளியிட்டுள்ளது. தியாவ் தீவு பிரச்சினை குறித்து அமெரிக்கா பொறுப்புடைய கருத்தில் ஊன்றி நிற்க வேண்டும் என்று சீனா வேண்டுகோள் விடுப்பதாக 20ம் நாள் சீன வெளியுறவு அமைச்சின் செய்திதொடர்பாளர் சின் காங் செய்தியாளரின் கேள்விகளுக்குப் பதிலள்த்த போது தெரிவித்தார்.
தியாவ் யூ தீவின் அரசுரிமை குறித்து அமெரிக்கா குறிப்பிட்ட கருத்தை வெளியிடாது. ஆனால் இத்தீவு இப்போது ஜப்பானின் நிர்வாகத்தில் உள்ளது என்று தியாவ் தீவு பிரச்சினை குறித்து ஹிராலி க்லின்டன் அம்மையார் அண்மையில் தெரிவித்தார்.
தியாவ் யூ தீவை வாங்குவதென்ற தவறான நடவடிக்கையை ஜப்பான் அரசு பிடிவாதமாக மேற்கொண்டு, ஆத்திரமூட்டல் நடவடிக்கைகளை இடைவிடாமல் நடத்தியமை, தியாவ் யூ தீவு பிரச்சினை தொடர்ந்து சிக்கலாக மாறும் முக்கிய காரணமாகும் என்று சிங் காங் கூறினார்.