ஐ.நா பாதுகாப்பு அவை, கொரிய தீபகற்பத்தின் அமைதியையும் உறுதிப்பாட்டையும் பேணிக்காக்கும் கவனமான நடவடிக்கைகளை மேற்கொண்டு, இந்நிலைமை மேலும் தீவிரமடைவதைத் தவிர்க்க வேண்டும் என்று சீனா விரும்புவதாக அவர் தெரிவித்தார்.
வட கொரியா செயற்கைக்கோளைச் செலுத்துவது பற்றிய ஐ.நா பாதுகாப்பு அவையின் தீர்மானம் குறித்து, சீனாவும் அமெரிக்காவும் உடன்பாட்டுக்கு வந்தன. ஐ.நா பாதுகாப்பு அவை விரைவில் இத்தீர்மானத்தை ஏற்றக்கொள்ளக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.