சீனாவும் அமெரிக்காவும், பேச்சுவார்த்தை மற்றும் பரிமாற்றத்தை வலுப்படுத்தி, இரு தரப்பு நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பை அதிகரிக்கப் பாடுபட வேண்டும் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹோங் லெய் தெரிவித்தார்.
அமெரிக்க அரசுத் தலைவர் பாராக் ஒபாமா அவரது 2வது பதவிக்காலத்தில் தொடர்ந்து செயலாற்றுவது தொடர்பாக, ஹோங் லெய் 21ஆம் நாள் திங்கள்கிழமை இவ்வாறு கூறினார்.
சீன-அமெரிக்க உறவு தொடர்ந்து சீராகவும் நிலையாகயும் வளர்ந்து வருவதே, இரு நாடுகள் மற்றும் பொது மக்களின் அடிப்படை நலன்களுக்கு பொருந்தியதாக உள்ளது. மேலும், உலகின் அமைதி, நிலைப்புத்தன்மை மற்றும் செழுமைக்கு இது தான் துணைபுரிகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.