இந்தியாவில் தங்கத்தின் மீது பொது மக்களின் ஆர்வம் நாளுக்கு நாள் உயர்ந்து வருவதைக் கட்டுப்படுத்த, இந்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது என்று த இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.
தங்கம் வாங்குவதற்காக தனிநபருக்கு கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிப்பது, தங்க இறக்குமதி வரியை அதிகரிப்பது முதலிய நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ள உள்ளது.
தங்க இறக்குமதி வரி, 4விழுக்காட்டிலிருந்து 6விழுக்காட்டாக உயர்த்தப்படவுள்ளது.
மேற்கூறிய நடவடிக்கைகள் வெளியிடப்பட்ட பின், இந்தியாவில் பல்வேறு பெரிய தங்க விற்பனை நிறுவனங்களும் உயர் தர உலோகத்தின் மீதான இறக்குமதி அளவை அதிகரித்துள்ளன.