• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஆப்கானிஸ்தான் பிரச்சினைக்கான முதல் சீன-பாகிஸ்தான் கலந்தாய்வு
  2013-01-22 15:30:25  cri எழுத்தின் அளவு:  A A A   
பிரதேச நிலைமை மற்றும் ஆப்கானிஸ்தான் பிரச்சினைக்கான கலந்தாய்வு அமைப்பு முறையைச் சீனாவும் பாகிஸ்தானும் ஜனவரி 21ஆம் நாள் பெய்ஜிங்கில் துவக்கியதோடு அதன் முதல் கலந்தாய்வையும் நடத்தின. சீன வெளியுறவு அமைச்சகத்தின் ஆசிய விவகாரப் பிரிவுத் தலைவர் ரோஜோஹூய்யும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் ஆப்கானிஸ்தான் விவகாரப் பிரிவுத் தலைவர் ஹூசேயினும் அதற்குக் கூட்டாகத் தலைமை தாங்கினர்.

அதில், பிரதேச நிலைமை மற்றும் ஆப்கானிஸ்தான் பிரச்சினை பற்றி, இரு தரப்பும் கருத்துக்களை ஆழமாகப் பரிமாறிக் கொண்டன. பிரதேச நிதானத்துக்கும் பாதுகாப்புக்கும் ஆப்கானிஸ்தான் பிரச்சினை பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது. பன்முக நெடுநோக்கு ஒத்துழைப்புக் கூட்டாளியாகிய சீனாவும் பாகிஸ்தானும் இப்பிரச்சினை குறித்து கலந்தாய்வை நடத்துவது இப்பிரச்சினையின் தீர்வுக்கும், இரு நாடுகளுக்கிடை ஒருங்கிணைப்புக்கும் ஒத்துழைப்புக்கும் உறுதுணையாக இருக்கும் என்று இரு தரப்பும் ஒருமனதாக கருதுகின்றன.

அடுத்த கலந்தாய்வு இஸ்லாமாபாதில் நடைபெறுவதை இரு தரப்பும் ஒப்புக்கொண்டன.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040