அதிகாரம் கொண்டிருப்பதில் கட்டுப்பாட்டையும் கண்காணிப்பையும் வலுப்படுத்தி, ஊழலை ஒழிக்க, தண்டனை, கண்காணிப்பு ஆகிய அமைப்புமுறைகளை உருவாக்க வேண்டும் என்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரும், சீன மத்திய ராணுவக் ஆணையத்தின் தலைவருமான ஷீ ச்சின்பிங் கூறினார். 22ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்ற சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் 18வது கட்டுப்பாட்டு கண்காணிப்பு கமிட்டியின் 2வது முழு அமர்வுக் கூட்டத்தில் முக்கிய உரை ஆற்றிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சட்டத்தை மீறி செயல்படும் அதிகாரம் யாருக்குமில்லை. யாராக இருந்தாலும், அதிகாரத்தைச் செயல்படுத்தும்போது, மக்களுக்குச் சேவை செய்து, அவர்களுக்குப் பொறுப்பேற்று, தன்னார்வத்துடன் அவர்களின் கவனத்தைப் பெறுவதை பல்வேறு நிலை தலைவர்கள் மனதில் கொள்ள வேண்டும் என்றும் ஷீ ச்சின்பிங் தெரிவித்தார்.