சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒழுங்கு பரிசோதனைக்கான 18வது கமிட்டியின் ஆண்டு கூட்டம் அண்மையில் நிறைவடைந்தது. ஜனவரி 23ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையின்படி, இவ்வாண்டு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி சீர்கேட்டு எதிர்ப்புப் பணியை தொடர்ந்து வலுப்படுத்த வேண்டும். மேலும், கட்டற்ற முறையில் அதிகாரத்தைப் பயன்படுத்திய நிர்வாக வாரியங்கள் மற்றும் ஊழியர்களுக்குக் கண்டிப்பான தண்டனை விதித்து, அதிகாரம் மீதான கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பை வலுப்படுத்தி, ஊழல் எதிர்ப்பு பற்றிய சட்ட அமைப்பு முறையின் ஆக்கப்பணியைத் தூண்ட வேண்டும்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒழுங்கு பரிசோதனைக்கான 18வது கமிட்டியின் ஆண்டு கூட்டம் ஜனவரி 21 முதல் 22ஆம் நாள் வரை பெய்ஜிங்கில் நடைபெற்றது என்று தெரிவிக்கப்பட்டது.