தென் சீனக் கடல் சர்ச்சை குறித்து சர்வதேச நடுவர் தீர்ப்பை பிலிப்பைன்ஸ் கேட்டு கொள்ளும் என்பதற்கு, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹோங்லெய் 23ஆம் நாள் பதிலளித்தார். தென் சீனக் கடல் தொடர்பான சீன-பிலிப்பைன்ஸ் சர்ச்சையின் மூலக்காரணம் மற்றும் மையம், பிலிப்பைன்ஸின் சட்ட விரோதமான ஆக்கிரமிப்பு. அதுதான் இந்த உரிமைப் பிரதேசச் சர்ச்சையை ஏற்படுத்தியது என்று அவர் கூறினார்.
இருதரப்பு கலந்தாய்வு மற்றும் பேச்சுவார்த்தை மூலம் சர்ச்சையைத் தீர்க்க, சீனா எப்போதும் பாடுபட்டு வருகிறது. சீனாவின் நல்லெண்ணத்தை இது மிகப்பெருமளவில் வெளிப்படுத்துகிறது என்றும் ஹோங்லெய் தெரிவித்தார்.