• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
கொரிய தீபகற்பப் பிரச்சினை பற்றி சீனாவின் கருத்து
  2013-01-25 09:14:24  cri எழுத்தின் அளவு:  A A A   

வட கொரியா செயற்கைக்கோள் ஏவுவதற்கு, தடை தீர்மானத்தை ஐ.நா முன்பு ஏற்றுக்கொண்டது பற்றி, வட கொரியா 24ஆம் நாள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் உயர் நிலை அணு ஆயுதச் சோதனையை மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளது. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ஹூங் லைய் அன்று பிற்பகல் பெய்ஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறியதாவது:

"கொரிய தீபகற்ப அமைதியையும் நிலைப்புத் தன்மையையும் பேணிக்காத்து, தீபகற்பத்தில் அணு ஆயுதமின்மை என்ற நிலையை நனவாக்குவது, பல்வேறு தரப்புகளின் பொது நலன்களுக்குப் பொருந்தும். தற்போது அங்குள்ள நிலைமை, சிக்கலாகவும் பதட்டமாகவும் உள்ளது. தொடர்புடைய தரப்புகள் தெளிந்த சிந்தனையுடன் செயல்பட்டு, பதட்ட நிலைமையைத் தீவிரப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருக்க வேண்டும்."என்று ஹூங் லைய் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040