• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன-ஜப்பானிய உறவுக்கு 4 அரசியல் ஆவணங்களின் முக்கியத்துவம்
  2013-01-25 16:59:39  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டிப் பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங், ஜப்பானின் புதிய கொமெய்தோ கட்சித் தலைவர் நட்சுவ் யமகுச்சியை 25ஆம் நாள் பெய்ஜிங்கில் சந்தித்துரையாடினார். சீன-ஜப்பானிய உறவை வளர்ப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கும் சீனாவின் கோட்பாடு மாறவில்லை. இருநாடுகளுக்கிடை 4 அரசியல் ஆவணங்கள், இருநாட்டுறவுக்கு அடிப்படை போன்று முக்கியமாக அமைந்து, உறுதியாகக் கடைபிடிக்கப்பட வேண்டும் என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.

சீன-ஜப்பானிய உறவின் நீண்டகால சீரான வளர்ச்சியை நிலைநிறுத்த, ஒட்டுமொத்த நிலையைப் பெரிதென கருதி, இருநாடுகளுக்கிடையில் நிலவும் உணர்வுப்பூர்வமான பிரச்சினைகளை உரிய முறையில் கையாள வேண்டும் என்று ஷிச்சின்பிங் வலியுறுத்தினார். தியாவ் யூ தீவு பிரச்சினையில் சீனாவின் நிலைப்பாடு மாறாமல், தெளிவாக உள்ளது. ஜப்பானிய தரப்பு வரலாற்றையும் நிகழ்வுகளையும் சரிவர நோக்கி, நடைமுறை செயல்களின் மூலம் சீனாவுடன் இணைந்து பாடுபட்டு, பேச்சுவார்த்தை மற்றும் கலந்தாய்வு மூலம் இப்பிரச்சினையை உரிய முறையில் கட்டுப்படுத்தித் தீர்க்கும் பயனுள்ள வழிமுறையைக் கண்டறிய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

ஜப்பானிய-சீன உறவு மிக முக்கிய இருதரப்புறவுகளில் ஒன்றாகும். ஆசிய-பசிபிக் பிரதேசம் மற்றும் உலகின் அமைதி வளர்ச்சிக்கு இருநாடுகளும் கூட்டுப் பொறுப்பு ஏற்கின்றன. ஒட்டுமொத்த நிலையிலிருந்து தொடங்கி, ஒன்றுக்கொன்று நலன் தரக்கூடிய இருநாட்டு நெடுநோக்கு உறவின் வளர்ச்சியைத் தூண்ட நான் விரும்புவதாக ஜப்பானிய தலைமை அமைச்சர் ஷின்ச்சொ அபே ஷிச்சின்பிங்கிடம் வழங்கிய கடிதத்தில் தெரிவித்தார் என்று தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040