சீனாவின் சின்ச்சியாங்கில் சமூகம் நிதானமாக உள்ளது. சமூக அமைதியைப் பேணிகாக்கும் பணி, வழக்கமான, அறிவியல் ரீதியான, சட்டப்பூர்வப் பாதையில் முன்னேறியுள்ளது என்றும், தீவிரவாதம், பயங்கரவாதம், பிரிவினைவாதம் ஆகிய மூன்று சக்திகளின் சீர்குலைவு நடவடிக்கையை சின்ச்சியாங் அரசு கண்டிப்பாக தடுத்து, ஒடுக்கும் என்றும், பயங்கரவாத சூழற்சியை நடவடிக்கையாக மேற்கொள்வதற்கு முன் உறுதியாக துடைத்தொழிக்க வேண்டும் என்றும் சின்ச்சியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைவர் நூர் பெக்ரி தெரிவித்துள்ளார்.
26ம் நாள் உருமுச்சி நகரில் நடைபெற்ற சிங்கியாங்கின் 12வது தேசிய பேரவையின் முதலாவது கூட்டத்தில் அவர் இதைத் தெரிவித்தார்.
பல்வேறு தேசிய இனத்தவர்களில் சட்ட ஒழுங்கு உணர்வு, குடிமை நல உணர்வு, நாட்டுப் பற்று உணர்வு ஆகியவற்றை பரப்புரை செய்து, சமூக பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதில் மதத் துறையினர்களும் மத நம்பிக்கையாளர்களும் ஆக்கப்பூர்வ பங்காற்றுவதை தூண்ட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.