சீன அரசவை உறுப்பினர் தாய் பிங் குவோ அழப்பின் பேரில், 26ஆம் நாளிரவு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கிலாரி கிளிண்டன் அம்மையாருடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார். இரு நாட்டுறவு குறித்து அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
தாய் பிங் குவோ கூறுகையில், கடந்த 4 ஆண்டுகளில், சீனா மற்றும் அமெரிக்காவின் தலைவர்களின் சீரான தலைமை மற்றும் பல்வேறு துறையினரின் முயற்சியுடன், இரு நாட்டுறவில் முக்கிய முன்னேற்றம் காணப்படுகின்றன. பொதுவாகக் கூறின், இரு நாட்டுறவு நிதானமாக உள்ளது என்று கூறினார்.
கிலாரி கிளிண்டன் அம்மையார் கூறுகையில், சீனாவுடனான பரிமாற்றம், பேச்சுவார்த்தை, ஒத்துழைப்பு ஆகியவற்றைத் தொடர்ந்து வலுப்படுத்த அமெரிக்கா விரும்புகிறது. கடந்த 4 ஆண்டுகளில் அமெரிக்க-சீன உறவு பெற்ற பெரும் முன்னேற்றங்களின் அடிப்படையில், பெரிய நாடுகளுக்கிடை புதிய ரக உறவைக் கூட்டாக உருவாக்க முயற்சிகளை மேற்கொள்ள அமெரிக்கா விரும்புகிறது என்று அவர் தெரிவித்தார்.