திபெத்துக்குச் சிறப்புச் சுற்றுலா தொடர்வண்டி
2013-01-27 16:40:25 cri எழுத்தின் அளவு: A A A
திபெத்துக்கு வந்து சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் மக்களுக்கு வசதி அளிக்கும் வகையில், ஜொல்மோ லுங்மா எனும் சிறப்புச் சுற்றுலாத் தொடர்வண்டி ஜுன் திங்களில் இயங்கத் துவங்கும்.
ஒவ்வொரு ஆண்டு ஜுன் முதல் அக்டோபர் வரை இந்தத் தொடர்வண்டி சி நிங்-திபெத்-சி நிங் வழியாக 4 நாட்களுக்கு ஒரு முறை இயங்கும்.
அதில் சிறப்பு வழிக்காட்டியும் மருத்துவரும் பயணிகளுக்கு இலவசச் சேவை புரிவர்.
2012ஆம் ஆண்டு மொத்தம் ஒரு கோடியே 10 இலட்சம் மக்கள் திபெத்தில் பயணம் மேற்கொண்டனர். திபெத்தின் சுற்றுலா வருமானம் 1320 கோடி யுவானாகும். இவ்விரண்டும் வரலாற்றில் மிக உயர் பதிவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்