ஜனவரி 26ம் நாள், சீன வசந்த விழாவின் போக்குவரத்துக்கான முதல் நாளாகும். சுமார் 52 இலட்சத்து 56 ஆயிரம் பேர் இருப்புப் பாதைகளின் மூலம் பயணம் மேற்கொண்டுள்ளனர். மொத்தம் உள்ள 4500 தொடர் வண்டிகள் விழாவுக்கான போக்குவரத்தில் ஈடுபடும்கின்றன. தவிரவும் சுமார் 358 தற்காலிக தொடர் வண்டிகளும் அதிகரித்துள்ளன. தேசியளவில் போக்குவரத்து ஒழுங்கு சீராக இயங்குகின்றது என்று சீனத் தேசிய இருப்புப் பாதை பணியகம் தகவல் வெளியிட்டுள்ளது.
பயணிகளின் பயணத்திற்கு வசதியை வழங்குவதற்காக, 1027 தன்னார்வத் தொண்டர்கள், பெய்ஜிங் மாநகரின் மத்திய, மேற்கு, தென் போன்ற இருப்புப் பாதை நிலையங்களில் பணி புரிய துவங்கியுள்ளனர்.
சீன வசந்த விழாவின் போது பெருமளவு போக்குவரத்து இருக்கும் இந்த நிலை 40 நாட்கள் நீடிக்கும்.