தியாவ் யூ தீவுப் பிரச்சினையின் தீர்வுக்கு சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பது, நிலத்தை வியாபாரம் செய்வது, ராணுவ ஆற்றலைப் பயன்படுத்துவது ஆகிய 3 வழிமுறைகளும் சாதகமற்றவை என்று சீனாவுக்கான முன்னாள் ஜப்பானிய தூதர் டான்பா யுயிச்சிரோ கூறியுள்ளார்.
ஜப்பானில் வெளிநாட்டுச் செய்தியாளர் மன்றத்தில், ஜப்பான்-சீன உறவு பற்றி சொற்பொழிவு ஆற்றிய போது அவர் 28ஆம் நாள் பிற்பகல் இதைத் தெரிவித்தார். இரு தரப்புகளைப் பொருத்த வரை நட்புறவே ஒரேயொரு தேர்வாகும் என்று அவர் கூறினார்.