திபெத் தன்னாட்சிப் பிரதேச மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் கூட்ட நிறைவு
2013-01-28 19:26:52 cri எழுத்தின் அளவு: A A A
திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் 10வது மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் முதலாவது கூட்டம் 27ஆம் நாள் இனிதே நிறைவடைந்தது. கம்யூனிஸ்ட் கட்சியின் இப்பிரதேசக் குழுத் தலைவர் சென் சுவான் காவ் அதே நாள் மதத் துறையைச் சேர்ந்த சில உறுப்பினர்களைச் சந்தித்துரையாடினார்.
மதத் துறை பிரமுகர்களும் மத நம்பிக்கை கொண்ட மிகப்பல மக்களும் சீனத் தனிச்சிறப்புடைய சோஷலிசக் கட்டுமானத்தில் ஆக்கப்பூர்வமாகப் பங்காற்றும் குழுவாகும் என்று சென் சுவான் காவ் வலியுறுத்தினார்.
சோஷலிசச் சமூகத்துக்கு ஏற்ற வளர்ச்சி பாதையில், முழு பிரதேசத்தின் இணக்கத்தையும் அமைதியையும் முன்னேற்ற பங்காற்ற விரும்புவதாக மதத் துறையைச் சேர்ந்த மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் உறுப்பினர் சான்தான் பிங்சோக் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்