• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனா:சமாதான வளர்ச்சி பாதையில் ஊன்றி நிற்க வேண்டும்
  2013-01-29 15:40:50  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனா, சமாதான வளர்ச்சி பாதையில் ஊன்றி நிற்க வேண்டும். அதேவேளை, சட்டப்படியான உரிமை நலன்கள் மற்றும் நாட்டு மைய நலன்களைக் கைவிடக் கூடாது. வளர்ச்சிக்காக, பிற நாடுகளின் நலன்களைப் புறக்கணிக்கக் கூடாது. சீனா, சமாதான வளர்ச்சியை நடைமுறைபடுத்தவும், பொது வளர்ச்சியைத் தூண்டவும், பல தரப்புகளின் வர்த்தக அமைப்பு முறையைப் பேணிக்காக்கவும், உலகப் பொருளாதாரக் கட்டுப்பாட்டில் கலந்து கொள்ளவும் வேண்டும் என்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷி ச்சின்பிங் ஜனவரி 28ஆம் நாள் அரசியல் குழுவின் கூட்டுப்படிப்புக்குத் தலைமை தாங்கிய போது இவ்வாறு வலியுறுத்தினார்.

சீனாவின் அரசுரிமை, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி நலன்களுக்குத் தீங்கு விளைவிக்கும் எண்ணத்துடன் மற்ற நாடுகள் சீனாவுடன் வணிகம் செய்வதை எதிர்பார்க்கக்கூடாது. பல்வேறு நாடுகள் சமாதான வளர்ச்சி பாதையில் ஊன்றி நின்றால் தான், பொது வளர்ச்சி மற்றும் அமைதியைப் பேணிக்காக்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.

தவிர, சீனா நெடுநோக்கு கருத்துகளை வலுப்படுத்தி, திறந்த, ஒத்துழைப்புடன், கூடிய வளர்ச்சியில் ஊன்றி நின்று, சமாதான சர்வதேசச் சூழல் மூலம் வளர்ச்சியடைவதுடன், உலக அமைதியைப் பேணிக்காக்க வேண்டும். அத்துடன், சமாதான வளர்ச்சி விளைவிக்கும் நலன்களைச் சீன மக்களுக்கு இடைவிடாமல் வழங்கி, சமாதான வளர்ச்சி பாதைக்குத் தேவையான பொருளாதாம மற்றும் சமூக அடிப்படையை இடைவிடாமல் வலுப்படுத்த வேண்டுமென ஷி ச்சின்பிங் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040