சீனாவின் அரசுரிமை, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி நலன்களுக்குத் தீங்கு விளைவிக்கும் எண்ணத்துடன் மற்ற நாடுகள் சீனாவுடன் வணிகம் செய்வதை எதிர்பார்க்கக்கூடாது. பல்வேறு நாடுகள் சமாதான வளர்ச்சி பாதையில் ஊன்றி நின்றால் தான், பொது வளர்ச்சி மற்றும் அமைதியைப் பேணிக்காக்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.
தவிர, சீனா நெடுநோக்கு கருத்துகளை வலுப்படுத்தி, திறந்த, ஒத்துழைப்புடன், கூடிய வளர்ச்சியில் ஊன்றி நின்று, சமாதான சர்வதேசச் சூழல் மூலம் வளர்ச்சியடைவதுடன், உலக அமைதியைப் பேணிக்காக்க வேண்டும். அத்துடன், சமாதான வளர்ச்சி விளைவிக்கும் நலன்களைச் சீன மக்களுக்கு இடைவிடாமல் வழங்கி, சமாதான வளர்ச்சி பாதைக்குத் தேவையான பொருளாதாம மற்றும் சமூக அடிப்படையை இடைவிடாமல் வலுப்படுத்த வேண்டுமென ஷி ச்சின்பிங் தெரிவித்தார்.