அமைதி வளர்ச்சிப் பாதையில் ஊன்றி நிற்பது, கால வளர்ச்சி ஓட்டம் மற்றும் சீனாவின் அடிப்படை நலன்களின் படி, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொண்டிருக்கும் நெடுநோக்குக் கொள்கையாகும். இது, சுற்றுப்புறப்பிரதேசங்களுக்கு நலன்களைத் பயப்பது மட்டுமல்லாமல், உலகிற்கும் செழுமையை கொண்டு வந்துள்ளது என்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொது செயலாளர் ஷி ச்சின்பீங் அண்மையில் தெரிவித்தார். சர்வதேசச் சமூகம் அவரின் உரையில் பெரும் கவனம் செலுத்துகிறது.
நாம் அமைதி வளர்ச்சிப் பாதையில் ஊன்றி நிற்க வேண்டும். சர்வதேச விவகாரங்களில் மேலும் ஆக்கப்பூர்வமாகக் கலந்துகொள்ள வேண்டும் என்று ஷி ச்சின்பீங் தன் உரையில், குறிப்பிட்டார். இந்தியாவின் ஆசிய செய்தி நிறுவனம் ஜனவரி 29ஆம் நாள் இதைக் குறித்து கட்டுரை வெளியிட்டுள்ளது.