Brahmaputra ஆற்றின் நீர்வளப் பயன்பாடு பற்றி சீனாவின் கருத்து
2013-01-30 19:50:39 cri எழுத்தின் அளவு: A A A
நாட்டின் எல்லையைக் கடந்துச் செல்லும் ஆற்றின் நீர்வளத்தைப் பயன்படுத்துவதில் சீனா எப்போதும் பொறுப்பான மனப்பான்மையைக் கடைப்பிடிக்கிறது. எந்த புதிய திட்டப்பணியும், அறிவியல் ரீதியான திட்ட வரைவு மற்றும் ஆய்வுக்கு பிறகுதான் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இந்த ஆற்றின் மேற்கு பகுதி மற்றும் கீழ் பகுதியில் உள்ள நாடுகளின் நலன்களை சீனா கருத்தில் கொள்ளும் என்று சீன வெளியுறவு அமைச்சின் செய்தித்தொடர்பாளர் ஹோங் லெய் தெரிவித்தார்.
அன்மையில் சீன அரசு வெளியிட்ட 12வது ஐந்தாண்டுக்கால எரியாற்றல் வளர்ச்சித் திட்டத்தில், Brahmaputra ஆற்றின் நடுப் பகுதியில் மூன்று நீர் மின் நிலையங்களை நிறுவுமென என்று தெரிவித்தது. இத்தகவல் இந்தியாவில் கவலை எழுப்பியுள்ளது. 30ஆம் நாள் பெய்சிங்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இது பற்றி செய்தியாளரின் கேள்விக்குப் பதிலளித்தபோது, ஹோங் லெய் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்