சீன வானொலி நிலையம் நடத்திய கவிஞர் தாகூர் படைப்புகளின் மொழிபெயர்ப்புக்கான 2வது ஆய்வுக் கூட்டம் 31ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது.
சீன சமூக அறிவியல் கழகம், பெய்ஜிங் ஆசிரியர் பயிற்சிப் பல்கலைக்கழகம், சீன வானொலி நிலையம், சீன அயல் மொழி வெளியீட்டுப் பணியகம் முதலிய வாரியங்களில், தாகூர் படைப்புகளின் மொழிபெயர்ப்பு மற்றும் ஆராய்ச்சியில் ஈடுபடுகின்ற 10க்கு மேலான நிபுணர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். தாகூர் படைப்புகளின் தொகுப்பு எனும் புத்தகத் தொகுப்பின் மொழிபெயர்ப்பு மற்றும் வெளியீடு குறித்து அவர்கள் விவாதம் நடத்தினர்.