தற்போது, கொரிய தீபகற்பத்தின் நிலைமை மிகவும் சிக்கலாக உள்ளது. தொடர்புடைய தரப்புகள், கட்டுப்பாடு மற்றும் தெளிந்த சிந்தனையுடன் செயல்பட்டு, இந்நிலைமை மேலும் தீவிரமாவதற்கு வழிகோலும் நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது என்று சீனா விரும்புவதாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹோங் லெய் ஜனவரி 30ஆம் நாள் தெரிவித்தார்.
வடக் கொரியா அண்மையில் மேற்கொண்ட அணு சோதனை குறித்து ஹோங் லெய் அன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசுகையில், சீனா, கொரிய தீபகற்பத்தின் நிலைமையில் பெரும் கவனம் செலுத்தி வருகிறது. அத்துடன், தொடர்புடைய தரப்புகள் கொரிய தீபகற்பத்தின் அமைதியையும் நிதானத்தையும் கூட்டாகப் பேணிக்காக்க வேண்டுமென விரும்புவதாக அவர் கூறினார்.