கவாடார் துறைமுகத்தின் நிர்வாகம்
2013-01-31 11:07:49 cri எழுத்தின் அளவு: A A A
கவாடார் துறைமுகத்தின் நிர்வாக அதிகாரம் சீனத் தொழில்நிறுவனத்துக்குக் கொடுப்பதாக, பாகிஸ்தான் அரசு 30ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக நிறைவேற்றிய ஒரு தீர்மானம் தெரிவிக்கிறது. பிரான்சு செய்தி நிறுவனத்தின் தகவலின்படி, கவாடார் துறைமுகம் மிக முன்னதாக, சீன முதலீட்டில் கட்டியமைக்கப்பட்டதாகும். 2007ஆம் ஆண்டு முதல், சிங்கப்பூர் துறைமுக நிர்வாகத் துறையின் கீழ் அது இயங்கி வந்தது. ஒப்பந்தத்தின்படி, பாகிஸ்தானின் இரண்டு தொழில்நிறுவனங்களும் அத்துறைமுகத்தின் சில பங்குரிமையை வகிக்கின்றன. சீனத் தொழில்நிறுவனத்தின் நிர்வாகத்தில், அது பாகிஸ்தானின் மந்தமான பொருளாதாரத்தை மேம்படுத்த உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் மேலதிக முதலீட்டை ஈர்க்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் தகவல் துறை அமைச்சர் 30ஆம் நாள் விருப்பம் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்