சி ச்சுவான் மாநிலத்தின் அபா திபெத் ச்சியாங் இனத் தன்னாட்சிச் சோவின் மக்கள் நீதிமன்றத்தில் லோரெங்குங்ச்சியு மற்றும் லோரெங்சேரெங்கிற்கு எதிராக கொலை குற்ற வழக்கின் தீர்ப்பு 31ஆம் நாள் வெளிப்படையாக வழங்கப்பட்டது.
கொலை குற்றத்தில் ஈடுபட்ட லோரெங்குங்ச்சியுக்கு மரணத் தண்டனை விதிக்கப்பட்டார். இந்தத் தண்டனை 2 ஆண்டுகளுக்குப் பின் மேற்கொள்ளப்படும். லோரெங்சேரெங் பத்தாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார்.
8 பேர் தீக்குளிக்க ஏற்பாடு செய்ததாக இவ்விருவரும் குற்றஞ்சாட்டப்பட்டனர். தீக்குளித்த 8 பேரில் மூவர் உயிரிழந்தனர். ஆகையால், இவ்விருவரின் செயல் கொலை குற்றச் செயலாகும் என்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.