2013ஆம் ஆண்டு வீட்டு வசதித் திட்டப்பணியை சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசம் விரைவுபடுத்தும். சுமார் 50 ஆயிரம் விவசாய மற்றும் ஆயர் குடும்பங்களுக்கு வசதியான வீடுகள் 90 கோடி யுவான் நிதியில் கட்டிமுடிக்கப்படும்.
திபெத் தன்னாட்சிப் பிரதேசம் இவ்வாண்டில் பொது மக்களுக்கு நலன் தர மேற்கொள்ளும் 10 நடவடிக்கைகளில் ஒன்றான இந்த வீட்டு வசதித் திட்டப்பணி, இப்பிரதேசத்தின் இரண்டு கூட்டத் தொடர்களில் கலந்து கொண்டு வரும் பிரதிநிகளின் கவனத்தை ஈர்க்கும் அம்சமாக மீண்டும் மாறியுள்ளது.
2012ஆம் ஆண்டு இறுதிவரை, சுமார் 21 இலட்சம் விவசாயிகளும் ஆயர்களும் வீட்டு வசதித் திட்டப்பணி மூலம் வசதியான வீடுகளில் வாழும் கனவை நிறைவேற்றியுள்ளனர்.