பண்பாட்டின் செழுமை, சீனாவின் மாபெரும் மறுமலர்ச்சிக்குத் தேவையானதாகும். பெரியதொரு பண்பாட்டு வளமிக்க நாட்டை உருவாக்குவது, ஒளிமயமான சீனக் கனவை நிறைவேற்றும் முக்கிய பணியாகும் என்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினர் லியு யுன்ஷான் அண்மையில் தெரிவித்தார்.
பல்வேறு நிலை கட்சிக் குழுக்களும், அரசுகளும், பண்பாட்டுப் பணியாளர்களில் கவனம் செலுத்த வேண்டும். அத்துடன், அவர்களின் ஆற்றலை வெளிக்கொணர்வது, மக்களுக்குச் சேவை புரிவது, மாபெரும் சமூகப் பங்காற்றுவது ஆகியவற்றுக்கு ஊக்கமளிக்க வேண்டுமென அவர் தெரிவித்தார்.