சீனாவின் பாரம்பரிய வசந்த விழா வரும் போது, சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரும், மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின் பிங் பிப்ரவரி 2 முதல் 5ம் நாள் வரை, சீனாவின் காங்சு மாநிலத்திற்குச் சென்று, அங்குள்ள பல்வேறு தேசிய இன மக்கள் மற்றும் ஊழியர்களைப் சந்தித்துரையாடினார். அத்துடன், நாட்டின் பல்வேறு தேசிய இன மக்கள் அனைவருக்கும் அவர் வசந்த விழா நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
காங்சு மாநிலத்தின் jiuquan,dingxi,linxia,lanzhou முதலிய பிரதேசங்களிலுள்ள கிராமப்புறங்கள், தொழில் நிறுவனங்கள், குடியிருப்பிடங்கள் முதலியற்றில் அவர் பயணம் மேற்கொண்டு பார்வையிட்டார். சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18வது தேசிய மாநாட்டின் எழுச்சியின்படி, மக்கள் வாழ்க்கையை உத்தரவாதம் செய்து, மேம்படுத்துவது, மேற்கு சீனாவின் வளர்ச்சியை விரைவுபடுத்தி, பணி முறையை மாற்றுவது ஆகியவை பற்றி அவர் சோதனை செய்துள்ளார்.