• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இலங்கையின் 65வது தேசிய சுதந்திர நாள்
  2013-02-05 09:32:46  cri எழுத்தின் அளவு:  A A A   
நாட்டின் வளர்ச்சியில் ஊன்றி நின்று உள்நாட்டுப் போருக்குப் பிந்தைய நல்லிணக்கத்தை முன்னேற்றுவது, பிற நாடுகளின் தவறான குற்றச்சாட்டுக்களைச் சமாளிப்பதற்கான தலைசிறந்த வழிமுறையாகும் என்று இலங்கை அரசுத் தலைவர் மஹிந்தா ராஜாபாக்ச பிப்ரவரி 4ஆம் நாள் நடைபெற்ற தேசிய சுதந்திர நாள் கொண்டாட்ட விழாவில் உரைநிகழ்த்துகையில் தெரிவித்தார்.

இலங்கையின் 65வது தேசிய சுதந்திர நாளைக் கொண்டாடும் வகையில், அன்று நாட்டின் கிழக்குப் பகுதியிலுள்ள திருகோண மலையில், கொண்டாட்ட விழா நடந்தது. வெளியுலகத்தின் ஐயம் மற்றும் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டு, போருக்குப் பின்பு, இலங்கையின் தேசிய நல்லிணக்கத்தை நேரடியாக பார்த்து உணர, இலங்கையில் பயணம் மேற்கொள்ளுமாறு தொடர்புடைய நாடுகளின் அலுவலர்கள் மற்றும் சமூக அமைப்புகளுக்கு இலங்கை அரசு அழைப்பு விடுத்துள்ளது.

மேலும், நாட்டின் பல்வேறு தேசிய இனங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும், சமூக அமைப்புகள், அரசுடன் இணைந்து நாட்டின் சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றும் ராஜாபாக்ச இலங்கையின் சிறுபான்மை தேசிய இனத்தின் மொழியான தமிழ் மொழியில் பேசி வேண்டுகோள் விடுத்தார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040