ஈரான் அரசுத் தலைவர் மொஹமத் அஹமதிநைஜத் பிப்ரவரி 5ஆம் நாள் எகிப்தில் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இரு நாட்டு உறவு 30ஆண்டுகளுக்கும் மேலாக துண்டிக்கப்பட்ட பின், எகிப்தில் மீண்டும் பயணம் மேற்கொள்ளும் முதல் ஈரான் அரசுத் தலைவர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.
எகிப்தில் பயணம் மேற்கொள்ளும் அதேவேளையில், கெய்ரோவில் நடைபெறவுள்ள இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டிலும் அஹமதிநைஜத் கலந்து கொள்வார்.
1980ஆம் ஆண்டில் எகிப்துக்கும் ஈரானுக்கும் இடை தூதாண்மை உறவு துண்டிக்கப்பட்டுள்ளது. மற்றொரு தரப்பின் தலைநகரத்தில் தத்தமது பிரதிநிதி அலுவலம் மட்டுமே தொடரும் என்று தெரிய வருகிறது.