சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும் அரசவையின் துணைத் தலைமையமைச்சருமான லீ கெச்சியாங் பிப்ரவரி 3ஆம் நாள், உள் மங்கோலியா தன்னாட்சிப் பிரதேசத்தின் Baotou நகரின் Beiliang குடிசைக் குடியிருப்பு சீராக்கும் பணி பற்றிய கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார். புதிய சுற்று குடிசைக் குடியிருப்பு சீராக்கும் பணியை மேற்கொண்டு, நகரின் கட்டமைப்பு பிரச்சினையைத் தீர்க்க வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.
சீன அரசு, குடிசைக் குடியிருப்பு சீராக்கும் பணி முதலிய மக்களின் வாழ்க்கையைப் பற்றிய முக்கிய திட்டப்பணிகளுக்கான நிதியை அதிகரிக்கும். உள்ளூர் அரசுகளும், இப்பணியில் மேலும் அதிக நிதியை ஒதுக்க வேண்டும் என்றும் லீ கெச்சியாங் தெரிவித்தார்.