கொரிய தீபகற்பத்தின் தற்போதைய நிலைமையை மோசமாக்கும் எந்த செயல்பாடுகளையும் சீனா எதிர்க்கிறது. பல்வேறு தரப்புகள் கவனமாக செயல்பட வேண்டும் என்று சீனா வேண்டுகோள் விடுக்கிறது.
வடகொரியா மீது மேலும் கண்டிப்பான தடைகளை அமெரிக்காவும் தென்கொரியாவும் ஆய்வுச் செய்ய துவங்கியிருப்பது குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹுவா ட்சுன்னிங் அம்மையார் இவ்வாறு கூறியுள்ளார்.
வடகொரியா, மூன்றாவது அணுச் சோதனை நடத்தக் கூடும். அதற்காக, அமெரிக்காவும் தென்கொரியாவும் மேலும் கண்டிப்பான தடைகளை விதிக்க ஆய்வுச்செய்து வருகின்றன.