அடுத்த ஐந்தாண்டுகளில், உயிரின வாழ்க்கைச் சூழல் மேம்பாடு அடைவதை சீனத் திபெத் தன்னாட்சிப் பிரதேசம் தொடர்ந்து பெரிதும் தூண்டி, உயிரின வாழ்க்கை நாகரீகத்தை ஆக்கப்பூர்வமாக பரப்புரைச் செய்யும். அண்மையில் நடைபெற்ற திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் பத்தாவது மக்கள் பேரவையின் முதலாவது கூட்டத்திலிருந்து இத்தகவல் கிடைத்துள்ளது.
ஆய்வு புள்ளிவிபரங்களின்படி, திபெத்தில் நீர், காற்று, ஒலி, மண், கதிர்வீச்சு, உயிரின வாழ்க்கைச் சூழல் ஆகியவற்றின் தரம், சிறந்த நிலையில் இருந்து வருகிறது.