சீனப் பொருளாதார வளர்ச்சிப் போக்கு நன்றாக மாறி வருவதால், ஓரளவு வசதியான குடும்பங்கள் தங்கள் செல்வங்களை அதிகரித்துக்கொள்ளும் நம்பிக்கை பெருமளவில் உயர்ந்துள்ளது. சீனப் போக்குவரத்து வங்கியும் ACNielsen நிறுவனமும் ஜனவரி 5ஆம் நாள் ஷாங்காயில் கூட்டாக வெளியிட்ட 15வது சீனச் செல்வச் செழிப்புக் குறியீட்டு எண் இதைக் காட்டுகிறது.
இந்த ஆயிவில் கலந்து கொண்ட ஓரளவு வசதியான குடும்பங்கள் 49 விழுக்காடு தற்போதைய குடும்ப வருமானத்தில் மனநிறைவு தெரிவித்தன. இந்த விழுக்காடு கடந்த காலத்தை விட 7 விழுக்காடு அதிகம். 57 விழுக்காட்டுக்கு மேலான குடும்பங்கள் எதிர்கால வருமான அதிகரிப்பில் நம்பிக்கை கொண்டுள்ளதாக இந்த ஆய்வுக் காட்டுகிறது.