உலக நிதி நெருக்கடி பொருளாதார மையங்களின் மாற்றத்தை விரைவுப்படுத்தியுள்ளது. 2017ஆம் ஆண்டுக்குள் சீனா, அமெரிக்காவைத் தாண்டி உலகில் மிகப் பெரிய பொருளாதார நாடாக மாறவுள்ளது என்று உலகிலுள்ள நான்கு பெரிய கணக்குத் தணிக்கை நிறுவனங்களில் ஒன்றான பிரைஸ் வேட்டர் ஹவுஸ் கூப்பர் நிறுவனம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டியது.
இவ்வறிக்கையின்படி, 2050ஆம் ஆண்டு, பொருளாதார வளர்ச்சியில், சீனா, அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய மூன்று நாடுகள் முன்னணியில் இருக்கும். அடுத்தபடியாக, மிகப் பெரிய இடைவெளியில் பிரேசில் இடம் பெறும். ஜப்பான், ரஷியா, மெக்சிகோ, இந்தோனேசியா ஆகியவை முறையே 5 முதல் 8வரையான இடங்களை வகிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.