சீனத் துணை தலைமை அமைச்சர் லீ கெச்சியாங் பிப்ரவரி 3 முதல் 5ஆம் நாள் வரை உள்மங்கோலியா தன்னாட்சிப் பிரதேசத்தின் பல இடங்களில் பணிப் பயணம் மேற்கொண்டார். விவசாயிகள் மற்றும் ஆயர்களைச் சந்தித்த தோடு, பல்வேறு தேசிய இனங்களின் பொது மக்களிடமும் அவர் உரையாடினார்.
தற்போது, சீனா புதிய வளர்ச்சியின் துவக்க நிலையில் இருக்கிறது. ஆனால், சமனற்ற வளர்ச்சி, குறிப்பாக, நகரங்களுக்கும் கிராமப்புறங்களுக்குமிடை இடைவெளி, கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளுக்குமிடையேயான இடைவெளி தெளிவாக காணப்படுகின்றன. இவ்விரு மிகப் பெரிய இடைவெளிகளைக் குறைக்கவே, தொடர்ந்து வளர்ச்சியடைவது தேவைப்படுகிறது. அனைவரும் கூட்டாக முயற்சி மேற்கொண்டு, மக்களின் வாழ்க்கைத் தர மேம்பாட்டிற்காக வளர்ச்சியைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று லீ கெச்சியாங் கூறினார்.