நாணய வீக்கத் தவிர்ப்பு
2013-02-07 09:58:57 cri எழுத்தின் அளவு: A A A
2012ஆம் ஆண்டு 4வது காலாண்டின் நாணயக் கொள்கை நடைமுறையாக்கம் பற்றிய அறிக்கையை சீன மக்கள் வங்கி புதன்கிழமை வெளியிட்டது. எதிர்காலத்தில் நிகழக்கூடிய நாணய வீக்க இடர்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்று இவ்வறிக்கை சுட்டிக்காட்டியது.நாணய வீக்கம் நிகழ்வதற்கான 3 காரணங்களை இவ்வறிக்கை தொகுத்துள்ளது. ஒன்று, உழைப்பு செறிந்த வேளாண் உற்பத்தி மற்றும் சேவைத் துறையில் விலைவாசி தொடர்ந்து உயர்வது. இரண்டு, பொருளாதார மீட்சி மற்றும் தேவையின் விரிவாக்கத்தால் நுகர்வு விலை குறியீடு மேலும் உயர்வது. மூன்று, உலக அளவில் தாளர நாணயச் சூழ்நிலை நிலவுவதால், வெளிநாடுகளிலிருந்து வரும் பண வீக்க நிர்பந்தத்தில் கவனம் செலுத்த வேண்டியிருப்பது.இந்த நிலைமை குறித்து, நாணயக் கொள்கையின் தொடர்ச்சி மற்றும் நிலைப்புத் தன்மையை உறுதிப்படுத்த வேண்டும் என்று அறிக்கை முன்மொழிந்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்