சிங்காய் மாநிலத்தின் ஹுவாங் நான் திபெத் தன்னாட்சி சோவில் 2012ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் முதல் நிகழ்ந்த தீக்குளிப்பு வழக்கைச் சிங்காய் காவல்துறை கடந்த சில நாட்களில் வெற்றிக்கரமாகத் துப்புத்துலக்கியது. 70 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தத் தீக்குளிப்பு வழக்குகள், வெளிநாட்டில் தலாய்லாமா குழு நடத்தி வரும் தேசிய பிளவுவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையவை என்று இதை வழக்கு குறித்து, சிங்காய் மாநிலத்தின் காவல்துறை பணியகத்தின் துணைத் தலைவர் லூ பன்சியான் கூறினார்.
சட்டப்படி குற்றமறியா மக்கள் தீக்குளிப்புப் போன்ற தற்கொலையைத் தூண்டும் குற்றங்களுக்குக் காவல்துறை கடுமையாகத் தண்டனை விதிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.