சீன பாரம்பரிய புத்தாண்டான வசந்த விழாவை முன்னிட்டு, பல்வேறு ஜனநாயக கட்சிகள் மற்றும் கட்சி சாரா பிரதிநிதிகளுடன் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிப் பொதுச் செயலாளர் ஷி ச்சின்பிங் பிப்வரி 6ஆம் நாள் பிற்பகல் பெய்ஜிங்கிலுள்ள சொங் நான் ஹாய் மாளிகையில் ஒன்று கூட்டி, இவ்விழாவைக் கொண்டாடினார்.
ஜனநாயக கண்காணிப்பை சீனா தொடர்ந்து வலுப்படுத்த வேண்டும் என்று ஷி ச்சின்பிங் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பல்வேறு நிலை கமிட்டிகள், பல்வேறு துறையினர்களின் கண்காணிப்பை வரவேற்பதோடு, பயனுள்ளதாக பணி முறையை மேம்படுத்தி, பணி நிலையை தொடர்ந்து உயர்த்த வேண்டும் என்று அவர் பேசியுள்ளார்.