சீனா உள்ளிட்ட நாடுகள் மீதான அமெரிக்காவின் சலுகைக்கு எதிரான வரி வசூலிப்பு புலனாய்வு
சீனா உள்ளிட்ட 7 நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உரைநிலை இறால், அமெரிக்காவின் தொடர்புடைய துறைக்குச் சாரம்ச ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இத்தகைய உற்பத்திப் பொருட்களின் மீது சலுகைக்கு எதிரான வரி வசூலிப்பு புலனாய்வை தொடர்ந்து மேற்கொள்ள அமெரிக்கா தீர்மானித்துள்ளது என்று அமெரிக்கச் சர்வதேச வர்த்தகக் கமிட்டி பிப்ரவரி 7ஆம் நாள் அறிவித்தது.
சீனா, ஈக்வேடார், இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து, வியட்நாம் முதலிய நாடுகளின் உரைநிலை இறால் ஏற்றுமதி நிறுவனங்கள் அரசு சலுகையைப் பெற்று அமெரிக்காவின் தொடர்புடைய துறைகளைப் பாதித்துள்ளன என்று அமெரிக்கச் சர்வதேச வர்த்தகக் கமிட்டி வாக்கெடுப்பு மூலம் உறுதிப்படுத்தியது.
அமெரிக்க வர்த்தக மீட்புதவிக் கொள்கையின்படி, 2013ஆம் ஆண்டு மார்ச் 25ஆம் நாளுக்குள் இப்பிரச்சினை பற்றி இக்கமிட்டி பூர்வாங்க தீர்ப்பு அளிக்கும்.