• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வெளிநாட்டு இணையத் தாக்குதலுக்குள்ளான சீனா
  2013-02-08 11:07:00  cri எழுத்தின் அளவு:  A A A   
கடந்த சில நாட்களில், "சீன இணையத் தாக்குதல்", "சீனர்கள் கள்ளத்தனமாக பிறரது இணைய இணைப்புகளில் நுழையும் தாக்குதல்" தொடர்பான செய்தி அறிக்கையை வெளிநாட்டு செய்தி ஊடகங்கள் பிரச்சாரம் செய்து வருகிறன. சீனத் தேசிய கணிணி இணையத்துக்கான அவசர தொழில் நுட்ப கையாளுதல் மற்றும் ஒருங்கிணைப்பு மையத்தின் புள்ளி விபரங்களின் படி, மேலை நாட்டின் சில செய்தி ஊடகங்களின் செய்தி அறிவிப்புக்கு மாறாக, சீனா, இணையத் தாக்குதலுள்ளான நாடாகும்.
இணையத்தின் விரைவான வளர்ச்சியுடன், சீனப் பெருநிலப்பகுதியில் இணையப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை பெரிதும் அதிகரித்து வருகிறது. ஆனால், மேலை நாடுகளில் இணையம் பயன்படுத்துவோருடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, சீனாவில் இணையப் பயன்படுத்தும் சீன மக்களின் பாதுகாப்பு எண்ணம் மிகவும் பலவீனமாக இருக்கிறது. இதனால் சீனா கடுமையான இணையத் தாக்குதலுக்குள்ளானது.
கடும் இணையத் தாக்குதலை எதிர்நோக்கி, 2012ஆம் ஆண்டு, சீனத் தேசிய கணிணி இணைய அவசர தொழில் நுட்ப கையாளுதல் மற்றும் ஒருங்கிணைப்பு மையம், தொடர்புடைய வாரியங்கள், தொழில் நிறுவனங்கள் ஆகியவை இணைந்து, நாடு முழுவதிலும் இணைய  தாக்குதல்களுக்கு எதிரான 14 சிறப்பு நடவடிக்கைகள் நடத்தின. தவிர, நடமாடும் இணையத்தில் தீய நோக்கமான ஒழுங்கு முறைக்கான 6 சிறப்பு நடவடிக்கைகளை அவை மேற்கொண்டன. இந்நடவடிக்கைகளில் ஆக்கப்பூர்வ பயன்கள் மேற்கொள்ள ஏற்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040