ஜனவரி திங்கள் 26ஆம் நாள் சீன வசந்த விழாவின் போக்குவரத்துக்கான முதல் நாளாகும். அன்று முதல், பிப்ரவரி 9ஆம் நாள் வரை, 8 கோடியே 28 லட்சத்து 91 ஆயிரம் பயணிகள் சீனாவின் இருப்புப் பாதையின் மூலம் பயணம் மேற்கொண்டனர். கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 2.7 விழுக்காடு அதிகமாகும்.
64 லட்சத்து 69 ஆயிரம் பயணிகள் பிப்ரவரி திங்கள் 7ஆம் நாள் இருப்புப் பாதையின் மூலம் பயணம் மேற்கொண்டனர். வரலாற்றில் வசந்த விழாவுக்கு முந்தைய போக்குவரத்தில் இது மிகவும் உயர் பதிவாகும்.
பிப்ரவரி 10ஆம் நாள், சீனச் சந்திர நாட்காட்டியின்படி புத்தாண்டின் முதல் நாளாகும். 20 லட்சத்து 39 ஆயிரம் பயணிகள் இருப்புப் பாதையின் மூலம் பயணம் மேற்கொள்வார்கள் என்று மதிப்பீடு செய்யப்படுகிறது.