2008ஆம் ஆண்டு வென் சூவான் மாவட்டத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தால் ஷான் சி மற்றும் கான் சூ மாநிலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. 2010ஆம் ஆண்டு கான் சூ மாநிலத்தின் சோ சூ மாவட்டத்தில் கடும் மண் அரிப்பு நிகழ்ந்தது. அப்பிரதேசங்களின் புனரமைப்புப் பணியில், சீனத் தலைமையமைச்சர் வென்ச் சியாபாவ் கவனம் செலுத்துகின்றார். கடந்த வாரம், வசந்த விழாவின் முந்திய நாள் வரை, வென்ச் சியாபாவ் அப்பிரதேசங்களுக்குச் சென்று, அங்குள்ள பல்வேறு இனங்களைச் சேர்ந்த மக்களைச் சந்தித்தார்.
வசந்த விழா வருகிறது. இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலுள்ள மக்களை மிகவும் கவனிக்கிறேன். இப்பிரதேசங்களில் மக்களின் வாழ்க்கை நிலைமை குறிப்பிடத்தக்க அளவிலான மேம்பாட்டைக் கண்டு, மகிழ்ச்சியடைகிறேன் என்று அவர் கூறினார். இயற்கைக்கு மதிப்பு அளித்து, உயிரைப் பேணிக்காக்க வேண்டும். மக்களின் பாதுகாப்புக்கும் நலனுக்கும் எப்போதும் முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
சோ சூ மாவட்டத்தில் வென் ச்சியாபாவ் பயணம் மேற்கொள்வது இதுவே மூன்றாம் முறையாகும். கடந்த இரண்டு ஆண்டுகளில், சோ சூ மாவட்டத்தில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு, அழகான சாலைகளும் கட்டிடங்களும் காணப்படுகின்றன.