பிப்ரவரி திங்கள் 11ஆம் நாள் திபெத்தின நாட்காட்டியின் படி புத்தாண்டின் முதலாம் நாளாகும். சீனத் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில் பல்வேறு இன மக்கள் பல்வகை வடிவங்களில் இந்நாளைக் கொண்டாடி வருகின்றனர்.
பாரம்பரியவழக்கப்படி லாசா நகரிலுள்ள ஒவ்வொரு வீடுகளிலும் புதிய அலங்கரங்கள் காணப்படுகின்றன. முழு நகரிலும் ட்சாசிதெலா என்ற வணக்கக் குரலால் நிறைந்து உள்ளது.
இம்முறை இந்த நன்நாள் சீன வசந்த விழாவுக்கு அடுத்த நாளாக உள்ளது. ஆகையால், வெளியூரிலிருந்து பல பயணிகள் திபெத்தில் பயணம் மேற்கொள்கின்றனர். பயணிகள் உள்ளூர் மக்களுடன் இணைந்து திபெத் புத்தாண்டின் கொண்டாட்டங்களில் பங்கெடுத்து மகிழ்கின்றனர்.
மொத்தம் 10 விழா நாட்களில், திபெத்தில் கலை நிகழ்ச்சிகள், குதிரை ஓட்ட பந்தாட்டம், பௌத்த மத நடவடிக்கைகள் முதலியவை நடைபெறுகின்றன.